குழந்தைகள் பாதுகாப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு - Last Date To Apply 10.09.2021
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் தாற்காலிகமாக ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்திட வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. சமுகப்பணியாளர் மற்றும் ஆற்றுப்படுத்துநர் ஆகிய பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரரின் விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வரவேற்கப்படுகின்றன.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரரர்கள் 10.09.2021 அன்றுக்குள் தங்களது விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ கீழ் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்கவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத் வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்ள tiruppur.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
அறிவிப்பு விவரம்:
நிறுவனம் - திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
பணியிடம் - திருப்பூர்
பணிகள் - சமுகப்பணியாளர் (Social Worker) மற்றும் ஆற்றுப்படுத்துநர் (Counsellor)
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி - 27.08.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.09.2021
அதிகாரபூர்வ இணையதளம் - tiruppur.nic.in
கல்வி தகுதி:
சமுகப்பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Graduate Degree, PG Degree (10+2+3), சமூகப்பணி, உளவியல், வழிகாட்டுதல் மற்றும் ஆலேசனை ஆகிய பிரிவில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆற்றுப்படுத்துநர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Graduate Degree (10+2+3), சமூகப்பணி, உளவியல், வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை பிரிவில் Degree மற்றும் PG Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை அறிந்து கொள்ள கீழ் உள்ள Official Notification-ஐ சென்று பார்வையிடவும்.
வயது தகுதி:
விண்ணப்பத்தரர்களின் வயது 40 வயதிற்கு மேல் இருக்க கூடாது.
விண்ணப்ப முறை:
அஞ்சல் (Offline) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அறை எண்: 633, 6வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர்.
குறிப்பு: தங்களது விண்ணப்பம் மற்றும் புகைப்படத்தை மேல்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலம் சமர்ப்பிக்கவும்.
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் :
tiruppur.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
பின் அவற்றில் Notices என்பதில் Recruitment என்பதை Click செய்யவும்.
பின் அவற்றில் Tiruppur District Child Protection Office Recruitment for Vacant Posts என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
இப்போது அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.
பின் தங்களுடைய விண்ணப்பங்களை மேலே உள்ள அஞ்சல் முகவரியில் சமர்ப்பிக்கவும்.
Click Here To Download - Official Notification & Application Form - Pdf
No comments: