தமிழக அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு
தமிழக அரசின் கீழ் செயல்படும் சமூக பாதுகாப்பு துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் சிவகங்கை மாவட்ட சமூக பாதுகாப்பு துறை அலுவலக பணிகளை மேற்கொள்ள Chair Person & Members ஆகிய பதவிகளை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் மூலமாக உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நிறுவனம் Sivagangai Social Welfare Department
பணியின் பெயர் Chair Person & Members
பணியிடங்கள் 01
கடைசி தேதி 20.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு பணியிடங்கள் :
சிவகங்கை அரசு சமூக பாதுகாப்பு துறையில் Chair Person & Members பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
கல்வித்தகுதி :
Child Psychology/ Psychiatry/ Law/ Social Work/ Sociology/ Human Development பாடங்களில் UG பட்டம் முடித்திருக்க வேண்டும்.
மேலும் பணியில் 7 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 20.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
முகவரி – District Child Protect Officer, District Child Protection Unit, No: 3/1-1-1 Periyar Nagar 1st Street, Thiruppathur Main Road, Sivaganga-630561.
No comments: