அரசுப் பள்ளியில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர் பணி : ஜனவரி 29 க்குள் விண்ணப்பிக்கலாம்
உதகை செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைபள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை மதிப்பூதியத்தில் பணி நிரப்புதல்
உதகை, அரசு தாவிரவியல் பூங்கா சாலையில் அமைந்துள்ள செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் துணை விடுதி காப்பாளர் பணியிடங்களை மதிப்பூதிய அடிப்படையில் நிரப்ப தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
துணை விடுதிக்காப்பாளர் பதவிக்கு மதிப்பூதியம் ரூ 12,000/- ஊதியத்தில் D.T.Ed, ஆசிரியர் டிப்ளமோ படிப்பும், செவித்திறன் சிறப்பு படிப்பும் முடித்தவர் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு மதிப்பூதியம் ரூ. 15,000/- ஊதியத்தில் பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு இளங்கலை கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் பயின்று Bed, சிறப்பு கல்வி முடித்த ஆண், பெண் ஆசிரியர்கள்
29.01.2024 -ம் தேதிக்குள் தலைைம ஆசிரியர், செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, தாவரவியல் பூங்கா சாலை, உதகை என்ற முகவரிக்கு விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், நீலகிரி மாவட்டம்.
No comments: