8ம் வகுப்பு தேர்ச்சி – அரசு வேலை – சம்பளம் ரூ. 58,100 – 02 காலி பணியிடங்கள் – Last date 30.12.2022
ஈரோட்டில் உள்ள அரசு தொழில்துறை பயிற்சி நிறுவனம் ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்த அறிவிப்பில் Office Assistant பணிக்கு என 02 காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
காலிப்பணியிடம் :
அரசு தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Office Assistant பணிக்கென 02 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Office Assistant கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .
GITI வயது வரம்பு:
Office Assistant பணிக்கு 01-07-2022 தேதியின்படி விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 மற்றும் அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
BC, MBC/ DNC பிரிவினருக்கு அதிகபட்ச வயதானது 34 ஆக இருக்க வேண்டும்.SC, SC(A ),ST பிரிவினருக்கு அதிகபட்ச வயதானது 37ஆக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
Office Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,700/-முதல் அதிகபட்சம் ரூ. 58,100/-வரை ஊதியமாக வழங்கப்படும்.
Office Assistant தேர்வு செய்யப்படும் முறை :
Government Industrial Training Institute பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை :
Office Assistant பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முதல்வர், அரசு தொழில் பயிற்சி நிறுவனம், காசிபாளையம், ஈரோடு-638009 என்ற முகவரிக்கு கடைசி நாள் 30.12.2022 க்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments: