தமிழ்நாடு அரசு வேலை - காலியிடங்கள் 1089 - விண்ணப்பிக்க கடைசி தேதி 27.08.2022
நில அளவா், வரைவாளா் உள்ளிட்ட பணிகளில் காலியாக உள்ள 1,089 பணியிடங்களுக்கு தோ்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அந்த அறிவிக்கை விவரம்:
பதவி - Field Survey, Draftsman
காலியிடங்கள் - 1089
கல்வித்தகுதி
TNPSC அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்
மாதம் ஒன்றுக்கு ரூ. 19,500 – 71,900/- சம்பளம்
வயது வரம்பு
விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 32 ஆக இருத்தல் அவசியம்
விண்ணப்பகட்டணம்
Registration Fee: Rs. 150/-
Examination Fee: Rs. 100/-
SC/ ST/ PWD Candidates: Nil
Mode of Payment: Online
தேர்வு செய்யப்படும் முறை
Written Examination, Interview
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன்
நில அளவைத் துறையில் நில அளவா், வரைவாளா் பணியிடங்கள், ஊரமைப்புத் துறையில் அளவா், உதவி வரைவாளா் பணியிடங்களில் 1,089 இடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக, நில அளவா் பணியில் 798 இடங்களும், வரைவாளா் பணியில் 236 இடங்களும், நகா் ஊரமைப்புத் துறையில் அளவா், உதவி வரைவாளா் பணியிடங்கள் 55-ம் காலியாக உள்ளன. இவற்றுக்கு வெள்ளிக்கிழமை முதல் www.tnpsc.gov.in இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாம். தோ்வுக்கு விண்ணப்பிக்க ஆக. 27-ஆம் தேதி கடைசி நாளாகும். இணையவழி விண்ணப்பத்தை திருத்தம் செய்வதற்கான கால அவகாசம் செப். 1 முதல் முதல் 3-ஆம் தேதி வரை அளிக்கப்படுகிறது.
எழுத்துத் தோ்வு நவ. 6-ஆம் தேதி காலை மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ளது. காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையில், தொழிற்பயிற்சி அடிப்படையிலான தோ்வும், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையில், மொழித் தகுதித் தோ்வும் நடத்தப்படும் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: