அறநிலையத்துறையில் நிரந்தர அரசு வேலை - 05 காலிப்பணியிடங்கள்
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் (TNHRCE) இருந்து நாமக்கல் அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
உதவி சுயம்பாகம் - 2
இளநிலை உதவியாளர் - 1
தட்டச்சர் - 1
டிக்கட் பஞ்சர் - 1
ஆகிய பணிகளுக்கு மொத்தமாக 5 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
வயது வரம்பு :
01.07.2021 தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
கல்வித்தகுதி :
உதவி சுயம்பாகம் - தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நைவேத்யம் மற்றும் பிரசாதம் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.
இளநிலை உதவியாளர் - SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தட்டச்சர் - SSLC தேர்ச்சி மற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு பெற்றிருக்க வேண்டும்.
Computer on Office Automation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
டிக்கட் பஞ்சர் - SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
உதவி சுயம்பாகம் - 10,000/- to 31,500/- + படிகள்
இளநிலை உதவியாளர் - 18,500/- to 58,600/- + படிகள்
தட்டச்சர் - 18,500/- to 58,600/- + படிகள்
டிக்கட் பஞ்சர் - 11,600/- to 36,800/-+ படிகள்
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் Interview செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் திருக்கோவில் அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.01.2022
No comments: